
சென்னை சேத்துப்பட்டு அரங்க நாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). கார் டிரைவரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107-வது வட்ட துணைச் செயலாளராக பதவி வகித்தார். டாக்டர் அம்பேத்கர் சமூக நலச் சங்கம் என்ற அமைப்பையும் நடத்தி வந்த இவர், சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் வேலைக்கு ஆட்களை வைத்து, டீக்கடையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், டீக்கடையின் அருகே இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு, நண்பர் மங்களபுரம் ஜெயவேலுடன் (48) பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், இளங்கோவனை கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments