ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக திமுகவினர் 9 பேர் சஸ்பெண்ட்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது ஆனால், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளர்களால் ஆலங்காயம், குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்குவாதம், மறியல், போன்ற சலசலப்புகள் ஏற்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments