9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு: இதர மாவட்டங்களில் காலி இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்.9-ல் இடைத்தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BpJLmw

Post a Comment

0 Comments