கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது: ரூ.99.20 லட்சம் கள்ளநோட்டுகள், கார்கள் பறிமுதல்

கோவையில் இரிடியம் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை அருகேயுள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒருவரதுவீட்டில், ‘இரிடியம்’ விற்பனை செய்யும் மோசடி கும்பல் தங்கியிருப் பதாக செட்டிபாளையம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ தலைமையிலான போலீஸார், அந்த வீட்டில் சோதனை நடத்தி 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற் றும் 2 கார்களை கைப்பற்றினர். இதையடுத்து, பிடிபட்ட நபர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments