
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சென்னையில் பழைய பேப்பருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டை, காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப் பொருட்கள், காகிதக் குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. இதனிடையே உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், கரோனா தொற்று பரவல் காரணமாக பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. அதனால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments