நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் ஆலோசனை: சென்னையில் 30-ம் தேதி நடைபெறுகிறது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், வரும் 30-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments