
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய வழித்தட விரைவு ரயில்களில் புதிய வகை 3-ம் வகுப்பு ஏசி ரயில் பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டிகளில் பயணிக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவு ரயில்களில் குறைந்தகட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் வகையில், ‘3ஏசி எகானமி’ ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. இந்தப் பெட்டிகள், புதியதாக தொடங்கப்பட்டுள்ள பிரயாக்ராஜ் - ஜெய்ப்பூர் (02403) விரைவு ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, மற்ற விரைவு ரயில்களிலும் இந்த ஏசி பெட்டிகளை படிப்படியாக விரிவுபடுத்த ரயில்வே திட்ட மிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BkCp3E
0 Comments