
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.1.86 கோடி நிதியுதவியை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு ரூ.1.86 கோடி நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இவை தவிர ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில்7 பழங்குடியினருக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், மின்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.15.22 லட்சம் மதிப்பில் இலவச மின் இணைப்புக்கான அட்டைகள் என மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments