
ஜோர்டான் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (FIBA) சார்பில் ஜோர்டான் நாட்டில் செப்.27 முதல் அக்.3-ம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்றுஉள்ள 12 பேர் கொண்ட மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில், தமிழகத்திலிருந்து முதல்முறையாக ஒரே நேரத்தில் 3 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் புஷ்பா, சத்யா ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தையும், நிஷாந்தி சென்னையையும் சேர்ந்தவர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ku2R4C
0 Comments