பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

விலை உயர்விற்குக் காரணம் என்ன?

தரவுகளின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக ஒவ்வொரு நாளும் ரூ,1,000 கோடி அளவிற்கு நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளன.

இந்த நஷ்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான், இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வும் மேலே கூறிய நஷ்டத்தைப் பாதி அளவுதான் ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு விலை உயர்வு?

இன்று இந்தியாவில் பெட்ரோல் விலை சுமார் ரூ.2.61-க்கும், டீசல் விலை ரூ.2.71 அளவிற்கும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 (+2.46) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.55 (+2.57) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.



from India News https://ift.tt/2ToMfvc

Post a Comment

0 Comments