SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம்.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

SIR
SIR
மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்...

> மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது.

> இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது.

> எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது.

> Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும்.

> அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி

அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார்.

இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம்.

இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது.



from India News https://ift.tt/n04hXwa

Post a Comment

0 Comments