
பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்.9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் இதுவரையிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments