
மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் சென்னை காவல் துறை முழு அளவில்ஈடுபட்டுள்ளது. மழைநீரில் தத்தளித்தவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்புக்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் களப்பணியில் உள்ளனர். இந்நிலையில், சூளை, அஷ்டபுஜம் ரோடு, அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். சூளை, அஷ்டபுஜம் ரோடு, பிரதிஷா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹீராலால் என்பவரது 2 வயது குழந்தைஉடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், காவல் உதவி ஆய்வாளர்டேவிட் தலைமையிலான சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் குழந்தையும் அவரது தந்தையையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments