மதுபோதையில் மற்றொருவரின் வீட்டுக்குள் நுழைந்ததாக அதிமுக முன்னாள் எம்பி மீது வழக்கு

மதுபோதையில் மற்றொருவரின் வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் சி.கோபாலகிருஷ்ணன். அதிமுகவைச் சேர்ந்த இவர் நீலகிரி தொகுதி முன்னாள் எம்பி ஆவார். சி.கோபாலகிருஷ்ணன், தீபாவளியன்று மதுபோதையில் ஆடையின்றி, குன்னூரில் கோபி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CWq1rs

Post a Comment

0 Comments