
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, இரு மாவட்டங்களின் பல்வேறுபகுதிகள் தீவுபோல காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்றுபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30OelZl
0 Comments