மதுராந்தகம் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளவை எட்டியது. அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. இதன் நீர்மட்டம் 23.30 அடி. இந்த ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில், ஏரிக்கு விநாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது. அதே அளவு உபரிநீர் வழிந்தோடி கிளியாற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளியாற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments