
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பங்கேற்பின்றி நாளை (9-ம் தேதி) மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையால் கோயில் வளாகத்தில் இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், கோயில் கலையரங்கம் மற்றும் வளாகத்தில் தங்கும் பக்தர்களை போலீஸார் வெளியேற்றுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments