
கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள இந்த ஏரியில், கிருஷ்ணா நீரால் ஏற்கெனவே நீர் இருப்பு அதிகரித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments