தமிழகம், புதுவையில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் சென்னை, புதுச்சேரி இடையேகரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 5 இடங்களில் அதிகனமழையும், 37 இடங்களில் மிககனமழையும், 66 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் ஆகிய இடங்களில் தலா 22 செமீ, மணம்பூண்டியில் 21 செமீ மழை பதிவாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments