தேர்தல் பயத்தால் மட்டுமே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: ப.சிதம்பரம் கருத்து

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அச்சத்தால் மட்டுமே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments