ரூ.26 லட்சம் மோசடி: ஏற்றுமதி நிறுவனம் மீது நடிகை சினேகா புகார்

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை 2012-ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது, சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கானாத்தூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை இவர் அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments