
திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து கடந்தஅக்.23-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி உடன்குடியைச்சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments