
மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ள நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு கட்சியை வலிமை மிக்கதாக அவர் மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘‘என் மகன் துரை அரசியலுக்கு வரமாட்டார்’’ என வைகோ உறுதியாக கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, துரை வைகோவுக்கு கட்சிப் பணியாற்ற வாய்ப்புவழங்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதிமுக தலைமை நிலையச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C6aHrM
0 Comments