திட்டக்குடியில் தூய்மை பணியாளர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அமைச்சர் சி.வெ.கணேசன்

மழைக்காலம் தொடங்கியுள் ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதியையும் தூய்மையாக வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினரான, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திட்டக்குடி நகராட்சி தூய்மை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் திமுக தொண்டர்களைக் கொண்டு திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து, வட்டாட்சியர் அலுவலகம் வரை சாலையில் உள்ள குப்பைகளை நேற்று அகற்றியதோடு, வாய்க்கால்களில் உள்ளஅடைப்புகளையும் அகற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments