கடந்த ஆட்சியில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக, அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் நகராட்சி 31-வது வார்டு அருணாச்சலம் நகரில் 'ஒரு நாள் - ஒரு வார்டு' திட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (அக்.12) காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியின்போது ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை கால்வாய்கள் உள்ள அடைப்புகளைப் பார்வையிட்டு அவற்றை அகற்றவும் பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments