
தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற திமுக நாடகம் நடத்துவதாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், அதன்பிறகு வரும் தேர்தல்களில் படுதோல்வி அடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்.
0 Comments