
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. கடந்த 12-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் சுமார் 27 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments