
தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி, ரூ.68 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் முத்துக்குமார் (29). இவரிடம் தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் சக்திவேல் (37),அவரது மனைவி ஜெயசித்ரா (30),தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்த கல்கண்டு மனைவி உஷா (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைசேர்ந்த மூக்கையா மகன் முத்துபாண்டி, சிலோன் காலனி முனியசாமி மகன் கார்த்திக்குமார் ஆகிய 5 பேரும் பொதுப்பணித்துறையில் நல்ல வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments