ஓமந்தூரார் மருத்துவமனையில் சோப்பு வங்கி தொடக்கம்; கைகளை முறையாக கழுவினால் நோய்களை 33 சதவீதம் குறைக்கலாம்: டீன் ஆர்.ஜெயந்தி விழிப்புணர்வு தகவல்

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் ‘உலக கைகள்கழுவும் தினம்’ நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி தலைமையில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் ‘கைகள் சுத்தம்வேண்டும் நித்தம்’ எனும் கோட்பாட்டுடன் கைகள் கழுவுவதன் முக்கியத்துவதை அனைவரும் அறியும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும்அறியும் வகையில் கைகழுவும்முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கைகள்கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவர்கள் குறுநாடகம் மற்றும் நடனம் மூலம் விளக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments