எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் சார்பில் 13 தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழில் சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் படைப்பாளிகளுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 8-வது ஆண்டாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பேராயம் புரவலரும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

இதில் எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, இரா.முத்துநாகு ஆகியோருக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது. இதேபோல் பாரதியார் கவிதை விருது - கவிஞர் கடவூர் மணிமாறனுக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - கவிஞர் வெற்றி செழியன், ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது - பேராசிரியர் முனைவர் பழனி அரங்கசாமி, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் தொழில்நுட்ப விருது - விஞ்ஞானி வி.டில்லிபாபு, முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - டிகேஎஸ் கலைவாணன், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - சி.மகேந்திரன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது - சி.மகேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments